வேதத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் நமது புராணங்கள் எளிய கதைகள் மூலம் எடுத்துரைத்து மக்களை தர்ம வழியில் ஈடுபட தூண்டுகின்றன அதில் 18 முக்கிய புராணங்கள் ஆகும் அவை
म - द्वयं भ - द्वयं चैव ब्र - त्रयं व - चतुष्टयम्।
अ - ना - प - लिङ् - ग - कु - स्का - नि पुराणानि प्रचक्षते॥
ம-த்வயம் ப-த்வயம் சைவ ப்ர-த்ரயம் வ-சதுஷ்டயம்।
அ-நா-ப-லிங்- க-கூ-ஸ்கா-நி புராணாநி ப்ரசக்ஷதே॥
அதாவது ம என்று ஆரம்பிக்கும் இரு புராணங்கள்
மத்ஸ்ய புராணம்,
மார்கண்டேய புராணம்
ப என்று ஆரம்பிக்கும் இரண்டு புராணங்கள்
பாகவத புராணம்,
பவிஷ்ய புராணம்
ப் என்று ஆரம்பிக்கும் மூன்று புராணங்கள்
ப்ரஹ்மாண்ட புராணம்,
ப்ரஹ்மவைவர்தக புராணம்,
ப்ரஹ்ம புராணம்
வ என்று தொடங்கும் நான்கு புராணங்கள்
வாமந புராணம்
வராஹ புராணம்
விஷ்ணு புராணம்
வாயு புராணம்
அ என்று தொடங்கும் அக்னி புராணம்
நா என்று தொடங்கும் நாரத புராணம்
ப என்று தொடங்கும் பத்ம புராணம்
லிங் என்று தொடங்கும் லிங்க புராணம்
க என்று தொடங்கும் கருட புராணம்
கூ என்று தொடங்கும் கூர்ம புராணம்
ஸ்க என்று தொடங்கும் ஸ்கந்த புராணம்
என பதினெட்டு புராணங்கள் உள்ளன.
- Prasanna Venkatraman