கரணம் என்னும் வடமொழிச்சொல்லுக்கு பிரித்தல் என்று பொருள். அதாவது திதியை இரண்டாக பிரிப்பதே கரணம் என்று பெயர்.
திதியில் பாதி கரணம் என்று கூறுவார்கள். அப்படியெனில் தேய்பிறை 15 திதி, வளர்பிறை 15 திதி என முப்பது திதிக்கு அறுபது கரணம் தானே இருக்க வேண்டும். ஆனால் நமது முன்னோர்கள் 11 கரணங்களின் பெயர்கள் தானே கொடுத்துள்ளார்கள்.
ஏனெனில் கரணங்களில் 7 சர கரணங்கள் ஆகும். இந்த சர கரணங்கள் வளர்பிறை பிரதமை திதியின் பிற்பாதியில் தொடங்கி தேய்பிறை சதுர்த்தசியின் முற்பாதி வரை 8 முறை திரும்ப திரும்ப வரும் அவை
1. பவம்
2. பாலவம்
3. கெளலவம்
4. தைதுலம்
5. கரசை
6. வணிசை
7. பத்திரை அல்லது விஷ்டி
கரணங்களில் 4 ஸ்திர கரணங்கள் ஆகும் இவை தேய்பிறை சதுர்த்தசியின் பிற்பாதி 57வது கரணம் சகுனி
அமாவாசையின் முற்பாதி 58 வது கரணம் சதுஷ்பாதம்
அமாவாசையின் பின்பாதி 59 வது கரணம் நாகவம்
வளர்பிறையின் முன் பாதி 60வது கரணம் கிம்ஸ்துக்னம்
இதில் பவம், பாவலம், கௌவலம், தைதுலம், கரசை போன்றவை சுப கரணங்கள் ஆகும்.
மீதமுள்ள வணிசை,பத்திரை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் போன்றவை அசுப கரணங்கள் ஆகும்.
கரண தேவதைகள்
பவ - இந்திரன்
பாலவ - பிரஜாபதி
கௌலவம் - மித்ரன்
தைதுலம் - பித்ருக்கள்
கரசை - பூமாதேவி
வணிசை - ஸ்ரீ தேவி
பத்ரை - யமன்
சகுனி - விஷ்ணு
சதுஷ்பாதம் - குபேர சேனாதிபதி மணிபத்ரன்
நாகவம் - சர்ப்பம்
கிம்ஸ்துக்னம் - வாயு
கரண தேவதைகளை வணங்கி வருவதன் மூலம் காரிய சித்தி ஏற்படும்.
- Astro Prasanna
No comments:
Post a Comment