இவ்வுலகில் கண்களுக்கு புலப்படும் கண்களுக்கு புலப்படாத வஸ்துக்கள் உண்டு. இவைகள் அனைத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. (விஞ்ஞான ரீதியாக கூட இது நிரூபிக்கப்பட்டது)
அதன் இயல்புகளை ஆய்வு செய்வது தான் தர்சனம் எனப்படும் தர்சனம் இரு வகைப்படும் அவை
ஆஸ்திகம், நாஸ்திகம்
இதற்கு பொருள் கடவுள் உண்டு கடவுள் இல்லை என்பது அல்ல. உண்மையான பொருள்
வேதத்தை ஆதாரமாக கருதும் தர்சனம் ஆஸ்திக தர்சனம் அதாவது வைதிக தர்சனம் (वैदिक दर्शनम्) என்றும்
வேதத்தை ஆதாரமாக கொள்ளாத தர்சனம் நாஸ்திக தர்சனம் அதாவது அவைதிக தர்சனம் (अवैदिक दर्शनम्) என்றும் பெயர்.
இதில் ஆஸ்திக தர்சனம் மற்றும் நாஸ்திக தர்சனம் முறையே ஆறு மற்றும் மூன்று பிரிவுகளாக பிரிக்கின்றனர்.
ஆஸ்திக தர்சனங்கள் ஆறு அவை
1. ஸாங்க்யம் (साङ्ख्यः)
2. யோகம் (योगः)
3. ந்யாயம் (न्यायः)
4. வைஶேஷிகம் (वैशेषिकम्)
5. பூர்வ - மீமாம்ஸா (पूर्व - मीमांसा)
6. உத்ர - மீமாம்ஸா / வேதாந்தம் (वेदात्तः)
நாஸ்திக தர்சனங்கள் மூன்று அவை
1. சார்வாகம் (चार्वाकम्)
2. ஜைநம் (जैनम्)
3. பௌத்தம் (बौद्धम्)
பௌத்தம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது
1. ஸௌத்ராந்திகம் (सौत्रन्तिकम्)
2. வைபாஷிகம் (वैभाषिकम्)
3. மாத்யமிகம் (माध्यामिकम्) - சூன்யவாதம் என்றும் பெயர்
4. யோகாசாரம் (योगाचारम्) - விஞ்ஞானவாதம் என்றும் அழைப்பர்.
- Prasanna Venkatraman
No comments:
Post a Comment