இறைவனை அடைய முன்னோர்கள் வகுத்த அடிப்படையான நான்கு வழிகள்
1.சரியை
2.கிரியை
3.யோகம்
4.ஞானம்
இதில் ஒவ்வொரு படிநிலைகளாக கடந்து தான் இறுதியில் ஞானத்தை அடைய முடியும்.
இந்த நான்கு பிரிவுகளில் நான்கு உட்பிரிவுகளாக ஆக பதினாறு படிநிலைகளை அமைத்துள்ளார்கள்.
1. சரியையில் சரியை
2. சரியையில் கிரியை
3. சரியையில் யோகம்
4. சரியையில் ஞானம்
5. கிரியையில் சரியை
6. கிரியையில் கிரியை
7. கிரியையில் யோகம்
8. கிரியையில் ஞானம்
9. யோகத்தில் சரியை
10. யோகத்தில் கிரியை
11. யோகத்தில் யோகம்
12. யோகத்தில் ஞானம்
13. ஞானத்தில் சரியை
14. ஞானத்தில் கிரியை
15. ஞானத்தில் யோகம்
16. ஞானத்தில் ஞானம்
இப்படி ஒவ்வொன்றிலும் நான்கு பிரிவுகள் உள்ளன.
சைவ குரவர்கள் நால்வர் இதில் ஒவ்வொன்றை பின்பற்றினார்கள்.
திருநாவுக்கரசர் - சரியை
திருஞானசம்பந்தர்- கிரியை
சுந்தரர் - யோகம்
மாணிக்கவாசகர் - ஞானம்
சரியை
உடம்பினால் இறைவனுக்கு செய்யும் திருப்பணிகள் ஆகும்.
கிரியை
தனது ஆத்ம மூர்த்தியை அகத்திலும் புறத்திலும் வழிபடுவது ( உரிய வழிமுறைகளை பின்பற்றி )
யோகம்
அட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திட சித்தமுடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.
ஞானம்
ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பணம் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும்.
இந்த நான்கு படிநிலைகளில் ஒவ்வொரு படிநிலைகளாக உணர்ந்து கடந்தால் தான் ஞானம் எனும் பெரும் பேறு கிட்டும்.
இது நான்கு நிலைகளை பற்றிய சிறு அறிமுகம் மட்டுமே. மீண்டும் விரிவாக பார்ப்போம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவனை நம்முள் உணர முயல்வோம்.
- Prasanna Venkatraman
No comments:
Post a Comment