Sunday, February 17, 2019

இறைவன் ஏன் பல வடிவங்களில் அருளுகிறார்?? சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம்

இறைவன் ஏன் பல வடிவங்களில் அருளுகிறார்??

சைவ சித்தாந்தம் இறைவன் நமக்கு அருள நான்கு நிலைகளில் இறங்கி வருவதாக கூறுகிறது.

ஸ்வரூபம், அரூபம்,.அருஉருவம்,உருவம் என நான்கு நிலைகள்.

இதில் உருவ வழிபாட்டில் மட்டும் ஏன் இத்தனை உருவங்கள் இறைவனுக்கு.

இறைவனுக்கு இது தான உருவம் இது தான் பெயர் இது தான் நிறம் என்று எல்லாம் சொல்ல முடியாது அப்பர் சுவாமிகள் இதனை கூறியிருக்கிறார்.

அப்படி வரையறுக்க முடியாத இறைவனின் திருமேனிக்கு ஏன் இத்தனை உருவங்கள் வைத்தனர்.

இந்த உருவ வழிபாடு என்பது ஆரம்ப நிலை வழிபாடு அதாவது சரியை நிலை வழிபாடு என்பதை முன்னரே பார்த்தோம்.

தடத்த நிலையில் சிவபெருமான் சோமாஸ்கந்தர், நடராஜர், பைரவர் என 64 விதமான உருவங்களில் அருளுகின்றார்.

ஏன் ஒரு மூர்த்தம் போதாதா? 64 விதமான வடிவங்கள் எதற்கு? என்ற கேள்வி வரும் அதற்கு சைவ சித்தாந்தம் தரும் விளக்கம்

போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்
யோகியா யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்ட லோரார்
ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவ னென்பர்.

இந்த 64 உருவங்களில் சில வடிவங்கள் போக ரூபமாகவும்,.சில வடிவங்கள் கோர ரூபமாகவும், சில வடிவங்கள் யோக ரூபமாகவும் உள்ளன.

இவை போகத்தை வேண்டுவோருக்கு போகத்தையும், மலத்தை அழித்து ஞானத்தை வழங்க கோர முகமாகவும், யோகத்தை வழங்க யோக ரூபமாகவும் அருளுகின்றார்.

அவரவர் மனநிலை பொருத்தே அவர்களின் மனம் சார்ந்து இறைவனை நாம் எப்படி காண்கிறோமோ அப்படி அருளுகின்றார்.

- #PV

கட்டுரையாக்கம். பிரசன்ன வெங்கட்ராமன்

No comments:

Post a Comment