Sunday, November 18, 2018

பதினெட்டு புராணங்கள்

வேதத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் நமது புராணங்கள் எளிய கதைகள் மூலம் எடுத்துரைத்து மக்களை தர்ம வழியில் ஈடுபட தூண்டுகின்றன அதில் 18 முக்கிய புராணங்கள் ஆகும் அவை

म - द्वयं भ - द्वयं चैव ब्र - त्रयं व - चतुष्टयम्।
अ - ना - प - लिङ् - ग - कु - स्का - नि पुराणानि प्रचक्षते॥

ம-த்வயம் ப-த்வயம் சைவ ப்ர-த்ரயம் வ-சதுஷ்டயம்।
அ-நா-ப-லிங்- க-கூ-ஸ்கா-நி புராணாநி ப்ரசக்ஷதே॥

அதாவது ம என்று ஆரம்பிக்கும் இரு புராணங்கள்

மத்ஸ்ய புராணம்,

மார்கண்டேய புராணம்

ப என்று ஆரம்பிக்கும் இரண்டு புராணங்கள்

பாகவத புராணம்,

பவிஷ்ய புராணம்

ப் என்று ஆரம்பிக்கும் மூன்று புராணங்கள்
ப்ரஹ்மாண்ட புராணம்,

ப்ரஹ்மவைவர்தக புராணம்,

ப்ரஹ்ம புராணம்

வ என்று தொடங்கும் நான்கு புராணங்கள்

வாமந புராணம்

வராஹ புராணம்

விஷ்ணு புராணம்

வாயு புராணம்

அ என்று தொடங்கும் அக்னி புராணம்

நா என்று தொடங்கும் நாரத புராணம்

ப என்று தொடங்கும் பத்ம புராணம்

லிங் என்று தொடங்கும் லிங்க புராணம்

க என்று தொடங்கும் கருட புராணம்

கூ என்று தொடங்கும் கூர்ம புராணம்

ஸ்க என்று தொடங்கும் ஸ்கந்த புராணம்

என பதினெட்டு புராணங்கள் உள்ளன.

- Prasanna Venkatraman

Sunday, November 11, 2018

ஆஸ்திக தர்சனம் - நாஸ்திக தர்சனம்


இவ்வுலகில் கண்களுக்கு புலப்படும் கண்களுக்கு புலப்படாத வஸ்துக்கள் உண்டு. இவைகள் அனைத்துக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. (விஞ்ஞான ரீதியாக கூட இது நிரூபிக்கப்பட்டது)

அதன் இயல்புகளை ஆய்வு செய்வது தான் தர்சனம் எனப்படும் தர்சனம் இரு வகைப்படும் அவை

ஆஸ்திகம், நாஸ்திகம்

இதற்கு பொருள் கடவுள் உண்டு கடவுள் இல்லை என்பது அல்ல. உண்மையான பொருள்

வேதத்தை ஆதாரமாக கருதும் தர்சனம் ஆஸ்திக தர்சனம் அதாவது வைதிக தர்சனம் (वैदिक दर्शनम्) என்றும்

வேதத்தை ஆதாரமாக கொள்ளாத தர்சனம் நாஸ்திக தர்சனம் அதாவது அவைதிக தர்சனம் (अवैदिक दर्शनम्) என்றும் பெயர்.

இதில் ஆஸ்திக தர்சனம் மற்றும் நாஸ்திக தர்சனம் முறையே ஆறு மற்றும் மூன்று பிரிவுகளாக பிரிக்கின்றனர்.

ஆஸ்திக தர்சனங்கள் ஆறு அவை

1. ஸாங்க்யம் (साङ्ख्यः)

2. யோகம் (योगः)

3. ந்யாயம் (न्यायः)

4. வைஶேஷிகம் (वैशेषिकम्)

5. பூர்வ - மீமாம்ஸா (पूर्व - मीमांसा)

6. உத்ர - மீமாம்ஸா / வேதாந்தம் (वेदात्तः)

நாஸ்திக தர்சனங்கள் மூன்று அவை

1. சார்வாகம் (चार्वाकम्)

2. ஜைநம் (जैनम्)

3. பௌத்தம் (बौद्धम्)

பௌத்தம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது

1. ஸௌத்ராந்திகம் (सौत्रन्तिकम्)

2. வைபாஷிகம் (वैभाषिकम्)

3. மாத்யமிகம் (माध्यामिकम्) - சூன்யவாதம் என்றும் பெயர்

4. யோகாசாரம் (योगाचारम्) - விஞ்ஞானவாதம் என்றும் அழைப்பர்.

- Prasanna Venkatraman