Wednesday, August 22, 2018

யோகங்கள் மற்றும் யோகங்களின் தேவதைகள்

யோகம் என்பதற்கு இணைவு என்று பொருள். சூரியன் சஞ்சாரம் செய்யும் பாகையும் சந்திரன் சஞ்சாரம் செய்யும் பாகையும் கூட்ட வருவது யோகம் ஆகும்.

யோகங்கள் நட்சத்திரங்களை போன்று 27 வகைப்படும்.

விஷ்கம்பம்         -  யமன்

ப்ரீதி                     -  விஷ்ணு

ஆயுஷ்மான்        -  வளர்பிறை சந்திரன்

சௌபாக்கியம்  -  பிரம்மா

சோபனம்             -  குரு

அதிகண்டம்        -  நைருதி

சுகர்மம்                - இந்திரன்

திருதி                   - வருணன்

சூலம்                    - சர்ப்பம்

கண்டம்                - அக்னி

விருத்தி               - சூரியன்

துருவம்                - பூமா தேவி

வியாகாதம்         - தேவதைகள்

ஹர்ஷணம்         - லட்சுமி

வஜ்ரம்                   - வருணன்

சித்தி                     - விநாயகர்

வியதீபாதம்         - ஏகாதச ருத்ரர்கள்

வரீயான்               - குபேரன்

பரிகம்                   - துவஷ்டா

சிவம்                     - மித்ரன்

சித்தம்                   - முருகன்

சாத்தியம்             - சாவித்திரி

சுபம்                      - லட்சுமி

சுப்பிரம்                - கௌரி

பிராம்யம்             - அஸ்வினி தேவதைகள்

ஐந்திரம்               - பித்ரு தேவதைகள்

வைதிருதி           - அன்றைய திதி தேவதை

அந்தந்த நாமயோகங்களில் அந்தந்த தெய்வங்களை வணங்கிவர சிறப்பு.

அவரவர் ஜென்ம தினத்தன்று இருந்த நாம யோகங்களின் தேவதைகளை வணங்கி வர சுபம் உண்டாகும்.

- Astro Prasanna

Tuesday, August 21, 2018

நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திர தேவதைகள்

பஞ்சாங்க வரிசையில் அடுத்து நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திர தேவதைகளை காண்போம்.

சூரியனை பூமி 360° யில் சுற்றிவருகிறது. இந்த சுற்றுப்பாதையை 13.20 பாகை வீதம் 27 சம பாகங்களாக்கி அந்த பாகத்தின் தன்மையைக்கொண்டு அதற்கு பெயரிட்டார்கள்.

சந்திரன் எந்த பாகத்தில் சஞ்சரிக்கிறதோ அன்று அந்த நட்சத்திரம் ஆகும்.

நமது ஜாதகத்தில் சந்திரன் நின்ற நட்சத்திரம் ஜாதகரின் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

மேலும் ஒரு நட்சத்திரத்தை நான்கு பாகங்களாக பிரிந்து (27 × 4)  108 பாதங்களை கொண்டது நட்சத்திர மண்டலம். இவ்வாறாக ஒரு ராசிக்கு 9 பாதங்கள் வீதம் 12 ராசிக்குள் இந்த 27 நட்சத்திரங்களையும் அடக்கினார்கள்.

ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் நட்சத்திர அதிபதிகள் மற்றும் நட்சத்திர தேவதைகள் உள்ளனர்.

நட்சத்திர தேவதைகளை பார்ப்போம்.

அஸ்வினி       -  சரஸ்வதி, இரட்டை அஸ்வினி தேவதைகள்.

பரணி              -  யமன், துர்க்கை

கிருத்திகை    -  அக்னி பகவான்

ரோகிணி        -  பிரம்மதேவன்

மிருகசீரிஷம் -  சந்திரன்

திருவாதிரை  - சிவன்

புனர்பூசம்        - அதிதி

பூசம்                  - குரு

ஆயில்யம்        - ஆதிசேஷன்

மகம்                  - சுக்கிரன்

பூரம்                  - பார்வதி

உத்திரம்          - சூரியன்

அஸ்தம்            - காயத்திரி

சித்திரை          - துவஷ்டா

சுவாதி              - வாயு

விசாகம்           - முருகன்

அனுஷம்         - லட்சுமி

கேட்டை            - இந்திரன்

மூலம்               - நைருதி

பூராடம்             - வருணன்

உத்திராடம்      - விநாயகர்

திருவோணம்  - மஹாவிஷ்ணு

அவிட்டம்           - அஷ்ட வசுக்கள்

சதயம்               - யமன்

பூரட்டாதி         - குபேரன்

உத்திரட்டாதி  - காமதேனு

ரேவதி              - சனீஸ்வரர்

அவரவர் ஜென்ம நட்சத்திர தேவைகளை வழிபடுவதன் மூலம் காரிய சித்தி உண்டாகும். அவரவர் நட்சத்திர தேவதையை வணங்கி வாழ்வில் வெற்றியடைவோம்.

- Astro Prasanna

Monday, August 20, 2018

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம் (பஞ்ச + அங்கம்) என்ற சொல்லுக்கு ஐந்து உறுப்புகள் என்று பொருள்.

பஞ்ச அங்கங்கள் என்பது

1.வாரம்

2.திதி

3.நட்சத்திரம்

4.யோகம்

5.கரணம்

அவரவர் ஜென்ம தினத்தின் போது இருந்த இந்த பஞ்ச அங்கங்களின் தேவதைகளை வணங்கி வர வாழ்வில் அனைத்து நன்மைகளையும் அடையலாம்.

திதி தேவதைகள் பற்றி பதிந்துவிட்டேன். இனி வரும் நாட்களில் மற்ற தேவதைகள் பற்றி பதிவிடுகிறேன்.

தினமும் அன்றைய தினத்தில் வரும் இந்த ஐந்து கரணிகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

- Astro Prasanna

Sunday, August 19, 2018

திதி தேவதைகள்


திதி என்னும் வடமொழி சொல்லுக்கு தூரம் என்று பொருள். இந்த தூரம் அல்லது திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் ஆகும்.

பூமிக்கு இருபுறமும் 180° யில் சூரியனும் சந்திரனும் சந்திக்கும் போது பௌர்ணமியும் அதேபோல 360°யில் பூமிக்கு ஒரே பக்கத்தில் இருக்கும் போது அமாவசையும் நிகழ்கிறது.

இந்த இடைவெளி தூரத்தை கொண்டு 15 திதிகளை பெயரிட்டார்கள்.

இந்த 15 திதிகளும் அதற்கு உண்டான திதி தேவதைகளையும் பார்ப்போம்.

பிரதமை       - அக்னி

துவிதியை   - துவஷ்டா

திருதியை    - பார்வதி

சதுர்த்தி       - விநாயகர்

பஞ்சமி         - நாக தேவதை

சஷ்டி             - முருகன்

சப்தமி           - சூரியன்

அஷ்டமி        - சிவன்

நவமி             - துர்கை

தசமி               - ஆதிசேஷன்

ஏகாதசி          - தர்மதேவதை

துவாதசி        - விஷ்ணு

திரயோதசி   - மன்மதன்

சதுர்தசி         - கலிபுருஷன்

பௌர்ணமி - சந்திரன்

அமாவாசை - பித்ரு தேவதை

வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகளுக்கு ஒரே தேவதைகளே.

திதி தேவதைகள் வணங்குவதன் மூலம் நமது முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும். எனவே அவரவர்கள் தாங்கள் பிறந்த திதி தேவதைகளை வணங்கி வாழ்வில் மேன்மை பெறுவோமாக.

- Astro Prasanna

Saturday, August 18, 2018

ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே

ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே

நாம் எந்த ஒரு சுப மற்றும் அபர காரியங்கள் செய்யும் முன்  அன்றைய திதி, வார, நட்சத்திரங்களை சொல்லி ஸங்கல்பம் செய்து ஆரம்பிப்போம் அந்த ஸங்கல்பத்தில் கீழ்கண்ட ஒரு வாக்கியம் வரும்

ஸ்வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே

இதன் விளக்கத்தை காண்போம்.

கிரதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற சதுர்யுகங்கள் இருப்பது நாம் அறிந்ததே.

ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள்

71 சதுர்யுகம் என்பது ஒரு மன்வந்தரம்

14 மன்வந்தரம் என்பது ஒரு கல்பம்

ஒரு கல்பம் என்பது பிரம்மாவுக்கு 1/2 நாள்

ஒரு கல்பத்தை 14 மனுக்கள் ஆட்சி செய்கிறார்கள். ஒரு மனுவின் ஆட்சிகாலம் ஒரு மனுவந்தரம் எனப்படுகிறது.

சுவயம்பு, சுவாரோசிஷம், உத்தமம்,தாமசம், ரைவதம், சாக்சூசம், வைவசுவதம், சாவர்ணி, தக்ச சாவர்ணி, பிரம்ம சாவர்ணி, தர்ம சாவர்ணி, ருத்திர சாவர்ணி, ரௌசிய தேவ சாவர்ணி, இந்திர சாவர்ணி ஆகிய பதினான்கு மனுக்கள் உள்ளார்கள்.

நாம் இப்போது இருப்பது ச்'வேதவராஹ கல்பத்தில் 7வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரம் ஆகும்.

ச்வேதம் என்றால் வெண்மை எனும் பொருள் அந்த வெண்மை நிறமுடைய வராகமானது ( நாராயணரால்) பூமியை மீட்டு எடுத்ததால் இதற்க்கு ஸ்வேத வராக கல்பம் என்று பெயர்.

இதனையே நாம் ஸங்கல்பத்தில் சொல்கிறோம்.

Astro P.V. Ramanan iyer