இக்காலத்தில் கல்வி கற்பது அந்த அறிவை கொண்டு பணம் படைக்க மட்டுமே பயன் படுத்துகிறோம்.
ஆனால் இலக்கியத்தில் பெரியோர்கள் சொல்கிறார்கள் கற்ற கல்வியை வைத்து இறைவனை கண்டறிவதே அதன் உண்மையான பயன் என்று. (மெய்பொருள் காண்பது அறிவு)
கல்வி கற்பதன் பயன் பற்றி இலக்கியத்தில்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
- வள்ளுவன்
யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.
-அருணகிரியார்
அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல்
நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானை
-மாணிக்கவாசகர்.
PV